districts

img

ஒன்றிய அரசை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் மறியல்

தமிழ்நாடு  அரசு கோரிய நிதியை வழங்காத ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு வியாழனன்று (ஆக,1)  ஆவேச மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.லோக நாதன், எஸ்.பாக்கியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.