கடலூர், செப்.9- கடலூர் முதுநகர் அருகே வீடுகளுக்கு குடிநீர் வராததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப் பாளையம், ஆண்டிக்குப்பம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள காமராஜ் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும் போது அந்த வழியாக வீடு களுக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்க ளாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால் குடி நீர் இல்லாமல் அவதிபட்ட பொது மக்கள் திங்களன்று (செப்.9) பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களு டன் சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முது நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேதமான குடிநீர் குழாய் உடனடி யாக சீரமைக்கப்பட்டு 24 மணிநேரத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.