வேலூர் பிப்.25 - மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உயர்கல்வி, உடல் ஆரோக்கியம், நற்பண்புகள் ஆகி யவை அவசியமாகும் என்று விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதன் கூறி னார். விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் காட்பாடி வட்டம், வண்டறந் தாங்கல் ஊராட்சியில் 7 நாட்கள் நடை பெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சி யில் விஐடி வேந்தர் கோ.விஸ்வ நாதன் தலைமை வகித்து பேசுகை யில், நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், அரசால் அங்கீகரிக்கப்பட்டவையாக 22 மொழிகள் தான் உள்ளன. விஐடி பல்கலைக்கழகத்தில் 60 மொழிகள் பேசும் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த முகாமில் பங்கேற்ற பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் முகாம் அனுபவங் களை தங்கள் தாய்மொழியில் பகிர்ந்து கொண்டது சிறப்பாகும். விஐடி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மேற்கொண்ட கணக் கெடுப்பில் வண்டறந்தாங்கல் ஊரா ட்சியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1084 பேரில் 777 பேர் அதாவது 67 விழுக் காட்டினர் உயர்கல்வி பயில்வது தெரியவந்துள்ளது. இது நம் இந்திய சராசரி 27 விழுக்காட்டைக் காட்டிலும் மாநில சராசரி 50 விழுக்காட்டைக் காட்டிலும் அதிக மாகும். தவிர, இந்த ஊராட்சி மக்கள் 48 விழுக்காட்டினர். பட்டதாரிகளாக இருப்பதும் மகிழ்ச்சி என்றார். காவிரியில் நீருக்காக போராடும் நிலையில் ஆண்டுக்கு 400 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கி றது. நீர் பற்றாக்குறையை போக்க வெள்ளம் வரும் காலத்தில் அதனை சேமிக்கவும், பாதுகாக்கவும் முன்வரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், பதிவாளர் டி.ஜெயபாரதி, விஐடி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.பாலாஜி, முகாம் ஒருங்கிணைப் பாளர் பி.ஜெயகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.