சென்னை மூலக்கடை எருக்கச்சேரி பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளின் தளவாடப் பொருட்களை வைப்பதற்காக அங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தடுத்த நிறுத்த வலியுறுத்தி சத்தியவாணி முத்து தெரு பூர்வீக நலச் சங்க நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.