districts

img

பேருந்து வசதி கேட்டு காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம், அக்.1- வாலாஜாபாத் அடுத்த தோண்டாங்குளம் பகு திக்கு அடிப்படை வசதியான  பேருந்து வசதி கோரி பள்ளி  மாணவர்கள், கிராம பொது மக்கள் என 100க்கும் மேற்பட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் ஒன்றியத் திற்கு உட்பட்ட தோண் டாங்குளம், கொசபட்டு கிராமங்கள் தேவரியம் பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இங்குள்ள பொதுமக்கள் மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைதேவைகளுக்கு கூட சுமார் 3 கிலோ மீட்டர்  தூரம் நடை பயணமாக  பயணித்து தேவேரியம் பாக்கம் பகுதிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து, பல்வேறு  கிராம சபை கூட்டங்களில் 6 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி போக்குவரத்து  துறைக்கு அனுப்பி வைத் தும் போதிய நடவடிக்கை இல்லை என கூறி பள்ளி  மாணவர்கள் கிராம பொது மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட  ஆட்சியர் கலைச்செல்வியி டம் கோரிக்கை மனு அளித்து தங்கள் குறை களை தெரிவித்தனர். குறிப்பாக உயர்கல்வி மற்றும் மருத்துவ வசதிக்கு செல்ல வேண்டிய நிலை யில் தங்களுக்கு தாம்பரத்தி லிருந்து வரும் வாகனங் களை குறிப்பிட்ட நேரத் திற்கு மாற்றம் செய்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.