districts

img

அடிப்படை வசதி இல்லாத அரசு பள்ளி

காஞ்சிபுரம், அக். 28 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, மாவட்ட ஆட்சியர் காலனி பகுதியில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால்  பள்ளி மணவர்கள் சிரமத்துடன் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.  மாணவர்களுக்குஅடிப்படை வசதிகளான பள்ளி வளாகத்தில் உள்ள திறந்த வெளி கால்வாயை மூட வேண்டும். வகுப்பறைகள் கட்டிடம் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். ஓராண்டாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டிடத்தை விரைந்து முடித்து டைல்கள் முழுமையாக ஒட்டப்பட்டு மாண வர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். மாசடைந்துள்ள கிணற்றைச் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படைவசதி செய்து தரக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 253 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளி யில் மாணவர்களுக்குத் தேவையான கழிவறைகள் இல்லை. கவுன்சிலர் மேற் பார்வையில் கட்டப்பட்டு வரும் கழிவறை கள் விரைந்து முடித்து, பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து பள்ளிக்கும் பள்ளி  அருகே உள்ள வீடுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த கிணறு பல  வருடங்களாக அசுத்த மடைந்துள்ளதால் இதனைச் சுத்தம்  செய்து துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு  மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு  செய்து  தண்ணீர் விநியோகம் செய்ய உத்தரவாதம் படுத்த வேண்டும். மேலும் மழைக் காலங் களில் பள்ளி மைதானத்தைச் சமன்படுத்த அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அந்த மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.