districts

img

கொரோனா கால கடனை தள்ளுபடி செய்க கைத்தறி துணை இயக்குநரிடம் நெசவாளர்கள் மனு

காஞ்சிபுரம், டிச.26 - கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட கடன்கனை அனைத்து நெசவாளர்க ளுக்கும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழி லாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் வியாழனன்று (டிச.26) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி துணை இயக்குநரிடம் மாவட்ட தலைவர் ஜி.லட்சுமிபதி, மாவட்ட செயலாளர் கே.ஜீவா, பொருளாளர் ஜி.வசந்தா, ஜி.எஸ். வெங்கடேசன் ஆகியோர் அளித்த மனு வில், கொரோனா தொற்று நோய் காலத்தில் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் அனை வருக்கும்   கூட்டுறவு சங்கங்கள் மூலம்  கடனாக  ரூ.4 ஆயிரம் கடனாக வழங்கப் பட்டது. இந்நிலையில் சங்கங்கள் வழங்கிய கடனை தற்போது தமிழக அரசு காஞ்சி புரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் ரூ.4 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பாரபட்சமான உத்தரவாகும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கடன் பெற்ற அனைத்து நெசவாளர்களுக்கும் தள்ளுபடி செய்யாமல் குறிப்பிட்ட இரண்டு சங்கங்க ளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்தது, பெரும்பகுதி நெசவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, தமிழக அரசு மற்றும் கைத்தறி துறை கொரோனா கடன் பெற்ற அனைத்து நெசவாளர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்து நெசவாளர்களை கடனில் இருந்து விடுவிக்குமாறு சிஐடியு கைத்தறி சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.