districts

img

பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க சிறுகடை வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, பிப். 27- பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும் என சிறுகடை வியாபாரி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி எம்சி ரோடு வணிகவளாக சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் 17ஆவது ஆண்டு பேரவை திங்களன்று (பிப். 27) ராயபுரத்தில் நடை பெற்றது. சங்கத் தலைவர் கே.செல்வானந் தன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் கே.பலராமன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் துவக்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் காசிம் வேலை அறிக் கையையும், பொருளாளர் எஸ்.பாலைய்யா வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். எஸ்.பவானி (சிபிஎம்), சி.முருகேஷ் (வாலிபர் சங்கம்), டி.வெங்கட், பி.பூபதி, எஸ்.தமீம் சேட்டு (சிஐடியு) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை நிறைவு செய்து பேசினார். துணைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
இயற்கை இடர்பாடுகளில் இருந்து வியா பாரிகளை பாதுகாக்க கடைகளுக்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும், சிசிடிவி  கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும், சென்னை மாநகராட்சி பயோ மெட்ரிக் அடையாள அட்டையை வியா பாரிகளுக்கு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நிர்வாகிகள்
தலைவராக கே.செல்வானந்தன், செய லாளராக பலராமன், பொருளாளராக எஸ்.பாலைய்யா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.