திருவண்ணாமலை, ஆக. 10-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசிக்கும் சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், வாடகை வீட்டில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைத் தலைவர் கே. நவாப் ஜான் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் யாசர் அராபத், மாவட்ட பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் அப்துல் காதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் .வீரபத்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.செல்வன், சிபிஎம் வட்டார செயலாளர் எ.லட்சுமணன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் எஸ். ராமதாஸ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.எம். பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.கணபதி, நிர்வாகிகள் ஆர்.காமராஜ், ஆர்.ஆறுமுகம், எம். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது. முன்னதாக மில்லத் நகரில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கலந்து கொண்டனர்.