கடலூர், ஆக. 27- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் மனு கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.பி. தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு வட்டாட்சியர் அசோகனிடம் 860 மனுக்கள் கொடுத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ். ராஜ், ஆர்.சிவகாமி, ஆர்.கே. சரவணன், குறிஞ்சிப்பாடி அமைப்புக் குழு செயலாளர் வி.மணிவண்ணன், வடலூர் அமைப்பு குழு செயலாளர் ஆர். இளங்கோவன், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.அஜித், செயலாளர் பூவை பாபு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.மகேஷ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். ரேவதி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். புவனகிரி புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புவனகிரி, பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுக்கள் சார்பில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் விஜய் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் வாஞ்சிநாதன், ஆழ்வார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கற்பனைச் செல்வம், ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி யளித்தார். வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.