districts

img

பாஜக கொள்கைகளுக்கு எதிராகவும் ஊழியர்கள் திரண்டால்தான் பொதுத்துறையை பாதுகாக்க முடியும்

சென்னை, டிச. 4- எல்ஐசியை காப்பாற்றுவது மட்டும் உங்கள் யுத்தமாக இருக்கக் கூடாது, பொதுத்துறை நிறு வனங்களை சீரழிக்கும் பாசிச கொள்கையை முறியடிப்பதற்கான யுத்தமாகவும் அது இருக்க வேண்டும் என்று  காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான  பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடை பெற உள்ளதையொட்டி வேப்பேரி யில் “பொதுத்துறைகள் பாது காப்பு” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் தலைமை தாங்கினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 1இன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார். முன்னாள் மக்களவை உறுப்பி னர் பீட்டர் அல்போன்ஸ் “ஜவஹர் லால் நேருவும்- பொதுத்துறை களும்” என்ற தலைப்பில் பேசுகை யில், இந்தியாவை நோக்கி பல்வேறு நாடுகள் பயணிப்பதன் நோக்கம், இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை. இந்த சந்தையை உரு வாக்கி வைத்திருப்பவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள்தான் இந்தியா வின் வளர்ச்சியை உந்தி இழுக்கின்ற இன்ஜின். ஏனென்றால் அவர்கள்தான் நிரந்தர ஊதியம் பெறுபவர்கள், அவர்கள்தான் பொருட்களை வாங்குபவர்கள். அவர்கள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்பவர்கள், அதி களவில் சுற்றுலா செல்பவர்கள், குழந்தைகளை படிக்க வைப்ப வர்கள், இன்சூரன்ஸ் செய்பவர்கள். இவ்வளவு பெரிய நடுத்தர வர்க்கம் உருவாக காரணம் பொதுத்துறை நிறுவனங்கள்தான். அப்படிப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் பங்கு மகத்தானது என்றார். காங்கிரஸ் ஆட்சியில் துவக்கப்பட்டது 252 பொதுத்துறை நிறுவனங்கள். சோசலிச சமூகத்தை அமைப்ப தற்கான முயற்சியில் எல்ஐசி ஒரு முக்கிய நகர்வு என்று ஜவஹர் லால் கூறினார். நேருவின் 17 ஆண்டு கால மொத்த பட்ஜெட் 12 ஆயி ரத்து 132 கோடி. இந்தாண்டு பட்ஜெட் மட்டும் 40 லட்சம் கோடி. அன்று தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்று விற்றுதான் இந்த அரசை நடத்துகிறார்கள் என்ற உண்மையை சமூகத்திற்கு சொல்ல முன்வர வேண்டும். இல்லை யென்றால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

ஒட்டுமொத்தமாக இந்த தேசம் தினசரி கூறு போட்டு கொண்டி ருக்கிறார்கள் என்பதை பெரும்பாலா னோர் உணர்வ தில்லை. மோடி ஆட்சிக்கு வரும் போது 600ஆவது இடத்தில் இருந்த ஒரு தொழிலதிபர் கடந்த 10 ஆண்டுகளில் எப்படி உலகத்தின் முதல் கோடீஸ்வரராக மாறுகிறார் என்ற கேள்வியை நாம் எழுப்புகிறோமா?  5 கோடியில் துவங்கப்பட்ட எல்ஐசி, இன்று 5 டிரில்லியன் என்று கூறப்படுகிறது. இதன் முழு உரிமை யாருக்கு, எல்ஐசியின் இயக்கு நருக்கா அல்லது ஊழியருக்கா என்றால் இல்லை. நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உரிமை யானது. ஆனால் ஒரு தனி நபர் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருக்கிறார் என்றால், அந்த வரு மானம் எங்கிருந்து வந்தது. அந்த வருமானம் நாட்டு மக்களுக்கு பயன்படுகிறதா? அதனால்தான் பெரும் நிறுவனங்கள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமாக, அவர்களுக்கு பயன்படக் கூடிய நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்களை நேரு உருவாக்கினார்.

பொதுத்துறை நிறு வனங்கள் ஒழிக்கப்பட்டால், பாதிக்கப்படுபவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படும். சமூக நீதி, இட ஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகிவிடும். ஒன்றிய அரசு இது அனைத்து மக்க ளுக்குமான திட்டம் என்று முத லில் கூறுவார்கள். அதை மக்கள் மத்தியிலே பரப்புவார்கள். அவர்க ளின் மிகப்பெரிய சக்தி எவ்வளவு பெரிய பொய்யையும் ஒரே நாளில் உண்மையாக்கி அதை 140 கோடி மக்களிடமும் சேர்த்து விடு வார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்கள். எதுவரை வெற்றி பெறுவார்கள் என்றால், கடைசி பள்ளி வாசல் இருக்கும் வரை. இனவாதம், மத வாதம், சாதிய வேறுபாடு இதுதான் அவர்களின் மூலதனம். எல்சியை காப்பாற்றுவது மட்டும் உங்கள் யுத்தமாக இருக்கக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும், சீரழிக்கும் இந்த பாசிச அரசை முறியடிப்ப தற்கான யுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுத்துறை நிறுவனங்கள், சமூக நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்று பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.  தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமி நாதன் “தேச வளர்ச்சியில் எல்ஐசி மற்றும் ஜிஐசி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.  காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் தலைவர் கே.மனோகரன் நன்றி கூறினார். இதில் தென்மண்  டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகிராமன், இணைச் செய லாளர்கள் ஆர்.கே.கோபிநாத், எஸ்.சிவசுப்பிரமணியம், கோட்டம் 2இன் பொதுச் செயலாளர் ஆர்.சர்வ மங்களா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.