சென்னை, டிச. 26- செல்லப்பிராணி களுக்கு வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உரிமம் பெற்று கொள்ளும் திட்டத்தை சென்னை மாநக ராட்சி அறிமுகப்படுத்தி யுள்ளது. இப்போதெல்லாம் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது நாகரீகமாக மாறிவிட்டது. உயர் ரக நாய்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லப்பிராணி களுக்கு முன்பெல்லாம் உரிமம் இல்லாமல் வளர்த்து வந்தனர். தற்போது உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த உரிமம் பெறுவதை சென்னை மாநகராட்சி எளிதாக்கி யுள்ளது. அதன்படி இணையவழி மூலம் உரிமம் வழங்கும் திட்டம் சென்னை மாநக ராட்சியால் தொடங்கப்பட் டுள்ளது. இதனை கிளிக் செய்தோ அல்லது கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தோ அதில் கேட்கப்ப டும் விவரங்களை கொடுப் பதன் மூலம் இணைய வழி யில் அதற்கான ஆய்வு களுக்கு பிறகு உரிமம் பெற்று கொள்ளலாம்.