districts

சென்னை முக்கிய செய்திகள்

இலவசமாக மண் எடுக்க அனுமதி

ராணிப்பேட்டை, ஜூலை 5 – தமிழ்நாடு அரசு இயற்கை வளங்கள் துறையின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண்  ஆகியவற்றை விவசாயி பணி மற்றும் பானை  செய்வதற்கு இலவசமாக எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணிப்பேட்டை, மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு  எண்.4 நாள் 25.06.2024 வெளியிடப்பட்டுள் ளது. மேலும், இது குறித்தான நிலையான  இயக்க முறைகள் (எஸ்ஒபி) வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் உரிய விண்ணப்பதாரர்களிட மிருந்து  ஆன்லைன் முறையில் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட நீர்நிலை களின் கட்டுபாட்டு அலுவலர் முன்னிலை யில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ள இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோரை அணுகலாம் என  மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித் துள்ளார்.

ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

காஞ்சிபுரம், ஜூலை 5 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தனியார் மகப்பேறு  மருத்துவர்கள், ஸ்கேன் மையங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை மருத்துவர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தை திருமணம்,  வளர் இளம் பருவத்தில் கர்ப்பம், சிசுபாலினம் தெரிவிக்காமை, தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், மக்களை தேடி மருத்துவம், காலநிலை மாற்றம், தொழுநோய், காசநோய், டாக்டர் முத்துலட்சுமிமகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் இந்த திட்டத்தில் சுய பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் சிசுவின்  பாலினத்தை தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார். அதனுடன்  குழந்தை திருமணம் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து தகவல்  கொடுக்காத தனியார் மருத்துவமனைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மணலூர்பேட்டை:  நூலகத்திற்கு புதிய கட்டிடம்

விழுப்புரம்,ஜூலை 5- ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் மணலூர்பேட்டை கிளை நூலகம் 5.3.1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இதுவரைக்கும் சொந்தமாக கட்டிடம்  இல்லாமல் இருந்தது. எனவே, சொந்தமாக கட்டிடம் கட்டிக்  கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர் இந்த நிலையில்,  ரூ. 22 லட்சத்தில் புதிய  நூலக கட்டிடம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 5)  அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகால  கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பேரூராட்சி மன்ற  உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், நூலகர்கள்  மற்றும்  ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தெரு நாய் தொல்லை: சிபிஎம் கவுன்சிலர் புகார்

சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் நகரம் 5வது  வார்டுக்குட்பட்ட வடக்கு வடுக தெரு,  லெப்பை தெரு, வடக்கு மெயின் ரோடு,  உள்ளிட்ட பல்வேறு தெருக் களில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.  தெருக்களில் நடந்து  செல்பவர்கள் இருசக்கர  வாகனத்தில் செல்பவர் களையும் துரத்திச் சென்று  கடிக்கின்றன. நாய் கடிக்கு  ஆளாகி பல பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வார்டு உறுப்பி னர் தஸ்லிமா தலைமையில் கட்சியின் நகர செயலாளர் ராஜா, ஜின்னா, அஷ்ரப் அலி,  கிளை செயலாளர் ஹலீம், வாலிபர் சங்க  நிர்வாகி ராசிக் உள்ளிட் டோர்  நகராட்சி ஆணையர் மல்லிகாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், சிதம்ப ரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை பிடிக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ள னர்.

கிரிக்கெட்: தமிழக வீரர்களுக்கு வரவேற்பு

சென்னை, ஜூன் 5- இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச காது கேளாதோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் இடம் பிடித்த தமிழ்நாடு வீரர்கள் இரண்டு பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் சாய் ஆகாஷ், சுதர்சன் ஆகிய இருவருக்கும் சிறப் பான வரவேற்பு அளித்த னர்.