கால முறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட நிரந்தர பணியாளர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்துக் கூலிக்கு நியமித்துக்கொள்ள தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.டி.ஜோஷி துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சேகர், மாவட்டச் செயலாளர் சுதர்சன், பொருளாளர் மதன்குமார், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.