சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கும் 25 பகுதிகளில் நிரந்தரமாக மோட்டார்கள்
சென்னை, நவ. 27- பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ளத்தால் பாதிக்கப்படும் 25 பகுதிகளை கண்டறிந்து, கால்வாய்களில் நேரடியாக தண்ணீரை வெளியேற்ற நிரந்தர 100 எச்.பி. மோட்டார்களை அமைக்கத் தொடங்கியுள்ளது. இந்த பகுதிகள் கால்வாய்களின் மட்டத்தை விட குறைவாக உள்ளது. இதன் விளைவாக 5 அடி வரை வெள்ளம் ஏற்படுகிறது. கொளத்தூரில் உள்ள செந்தில் நகர், டெம்லஸ் சாலை, டிகாஸ்டர், சாலை, ஈபி சாலை, சாந்தி நகர் இரண்டாவது பிரதான சாலை, புளியந்தோப்பில் சிவரோவா சாலை, மடிப்பாக்கத்தில் ராம் நகர், வேளச்சேரியில் உதயம் நகர் மற்றும் திருவொற்றியூரில் கரிகால் நகர், போரூர் சந்திப்பு ஆகியவை சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ள சில பகுதிகள். சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் கூறுகை யில், இந்த பகுதிகளுக்கு 100 எச்.பி. மோட்டார்கள் தேவைப்படும், ஏனெனில் அவை தாழ்வாக உள்ளன. அவை கால்வாய் கள் மற்றும் நீர் கால்வாய் மட்டங்களுக்கு கீழே அமைந்துள்ளதால், புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக இங்கு நீர் வெளியேறும் சாத்தியக் கூறுகள் சாத்தியமில்லை. இந்த பகுதிகளின் உட்புற பகுதிகள் பல, அவற்றின் நிலப் பரப்பு காரணமாக வடிகால்களுக்கு ஏற்றதாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது: ஓட்டேரி நூல், வீரங்கல் ஓடை போன்ற முக்கிய கால்வாய்களில், வெளியேறும் இடங்களில், 25 ஷட்டர்கள் அமைத்துள் ளோம். 2022ஆம் ஆண்டு மழைக்குப் பிறகு, நகரத்தில் 37 வெள்ளத்தில் மூழ்கிய பகுதி களை சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இந்த ஆண்டு, குறைவான எண்ணிக்கையி லான பகுதிகள் தேக்க நிலையை எதிர்கொள் ளும் என்று அவர்கள் நம்புகின்றனர். மாநில பேரிடர் மேலாண்மை துறை ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதன், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இழந்த நீர் வழித்தடங்களை கண்டறிந்து மீண்டும் உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.
புதிய சிமெண்ட் நிறுவனத்தை துவக்கியது எஸ்ஆர்எம் குழுமம்
சென்னை, நவ.2- எஸ்ஆர்எம் குழுமம் எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ் என்னும் புதிய நிறுவனத்தை துவக்கி சிமெண்ட் உற்பத்தி துறையில் நுழைந்துள்ளது. இதற்கான அறிமுக விழா சென்னையில் நடை பெற்றது. இதில் எஸ்ஆர்எம் குழும நிறுவனர் பாரி வேந்தர், குழும தலைவர் ரவி பச்சமுத்து, விளம்பர தூதர் நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்ட னர். அதிநவீன உற்பத்தி ஆலைகளுடன்சிமெண்ட் துறையில் அதிக அளவில் முதலீடு செய்து இந்திய சிமெண்ட் சந்தையில் முன்னணி நிறுவனமாக மாற எஸ்ஆர்எம்பிஆர் சிமெண்ட்ஸ்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி போர்ட்லேண்ட் போஸோ லானா சிமெண்ட் உற்பத்தி யுடன் வர்த்தகத்தில் இறங்க உள்ளது. மேலும்எஸ்ஆர்எம்பிஆர் நிறுவனம் விரைவில் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட சிமெண்ட் உட்பட பல்வேறு வகையான சிமெண்ட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. கட்டுமானப் பணிகளுக்கான சிமெண்ட் உடன் மற்ற தேவை களுக்கான வெள்ளை நிற சிமெண்ட்டையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது என்று ரவி பச்சமுத்து தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் 2 ஆலைகள் ஆந்திராவில் ஒரு ஆலை என 3ஆலை கள் ஆண்டுக்கு 420,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய் யும் திறன் கொண்டவை என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறினார்.
ஆள்மாறாட்டம் செய்து நிலம் விற்றவர் கைது
அம்பத்தூர், நவ. 2- திருமுல்லைவாயில் தேவி நகரைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் பெயரில் தேவி நகரில் உள்ள வீட்டு மனையில் வீடு கட்ட வங்கியில் காந்தி கடன் கேட்டார். அதற்கு வங்கி அதிகாரி கள் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இருந்தால் கடன் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் சி.எம்.டி.ஏ. அப்ரூவலுக்கு முயற்சித்தார். அதற்கு அதிகமான தொகை செலவு ஏற்படும் என்பதால் அதனை கைவிட்டார். இந்நிலையில் சென்னை ஈக்காட்டு தாங்கலைச் சேர்ந்த சிஜூ (40) என்பவர் காந்தியைச் சந்தித்தார். அப்போது காந்தியிடம் வீடு கட்ட கடன் வாங்கித் தருவ தாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார். அதை நம்பி காந்தி தனது மனைவி பெயரில் உள்ள வீட்டு மனையை சிஜூ பெயரில் அதிகாரம் பத்திரம் எழுதிக் கொடுத்து ரூ 5 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனிடையே தனது சொத்தின் வில்லங்க சான்றை சரிபார்த்த போது, அந்த சொத்து பிரபு டேனியல் மற்றும் யுகேந்திரன் மேரி பெயரில் பத்திரப் பதிவு ஆகியிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்த போது, சிஜூ அதிகாரப் பத்திரத்தின் மூலம் விஜயலட்சுமி பெயரில் உள்ள நிலத்தை விஜயலட்சுமியே விற்றது போல் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து 2018ஆம் ஆண்டு காந்தி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரி வில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிஜூவை தேடி வந்தனர். இதனிடையே இந்த வழக்கு ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சிஜூவை தேடி வந்தனர். இந்நிலை யில் சிஜூவை காவல்துறையினர் புதனன்று கைது செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.85 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வீடு கட்டும் அனுமதி கட்டணம் உயர்வு: நவ.10 முதல் அமலாக்கம்
சென்னை,நவ.2- சென்னையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கட்டணம் உயர்வு நவ.10 முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில், மாநகரில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், 100 சதுர மீட்டருக்கு அதாவது 1000 சதுர அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டினால் அனுமதி கட்டணம் 100 விழுக்காடு வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 100 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 , 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டருக்கு மேல் 10 சதுர மீட்டருக்கு ரூ.1050 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக் கான அனுமதி கட்டணமும் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பழைய கட்டிடங்களை இடிப்பதற் கான அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள் ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட இந்த தீர்மானத்தின்படி, புதிய கட்டண உயர்வு வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கார் கண்ணாடியை உடைத்து பட்டுச் சேலைகள் திருட்டு
காஞ்சிபுரம்,நவ.2- விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற உள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் பட்டுசேலை எடுக்க 2 கார்களில் காஞ்சிபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு சேலை கடையில் ரூ.60 ஆயிரத்திற்கு 4 பட்டு சேலைகளை வாங்கிவிட்டு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் கோவில் தெற்கு கோபுரம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்தபோது ஒரு காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60ஆயிரம் மதிப்புள்ள 4 பட்டு சேலைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. திருமணத்திற்கு எடுத்த பட்டுச்சேலைகள் கொள்ளை போனதையொட்டி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பண்டிகை கால விற்பனை இணையதளங்களில் அமோகம்
சென்னை, நவ.2- பண்டிகை காலம் தொடங்கிவிட்டதால் இணைய தளங்களில் வர்த்தகம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்தாண்டு அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில், அக். 8 அன்று மட்டும் முதல் 48 மணிநேரத்தில் இணைய தளத்திற்கு 9.5 கோடி வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர். 80 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வந்துள்ளனர். இந்த ஆண்டு திருவிழாவில் அதிக வாடிக்கையாளர்களும், அதிக ஆர்டர்களும் பெற்றதாக அமேசான் இந்தியா இயக்கு நர் சுசித் சுபாஷ் தெரிவித்தார். ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கை யாளர்கள் தயாரிப்புகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். முன்னதாக சென்னை மணப்பாக்கம் எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும் அமேசான் இணையதளத்தில் இடபெற்றுள்ள பொருட்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது. நுகர்வோர் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கியது என சுசித் சுபாஷ் கூறினார்.
பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வணிகர்கள் கோரிக்கை
சென்னை, நவ. 2- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மனு அளித்தார். அதில், பட்டாசு உற்பத்தியிலும், பட்டாசு வணிகத்திலும் தமிழ்நாட்டில் சிவகாசிக்கு தனி சிறப்பு உண்டு. கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலையீடு காரணமாக வும், ஒருசில எதேச்சதிகார வர்க்கத்தினரின் நடவடிக்கை களாலும், உழைக்கும் வர்க்கமான பட்டாசு தொழிலா ளர்களின் வாழ்வாதாரம், பட்டாசு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம், பண்டிகை கால பட்டாசு வணிகர்களின் வாழ் வாதாரமும் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. மனிதநேயமுள்ள மக்களின் முதல்வராகிய தாங்கள் இந்த பட்டாசு வணிக உரிமம் வழங்கும் பிரச்சனையில் தனிக்க வனம் செலுத்தி, தீபாவளிக்கு குறுகிய கால இடை வெளியே உள்ள நிலையில், பட்டாசு வணிகமும் பாதிக்கப் படாமல், பண்டிகை கால விற்பனையையே நம்பி இருக்கும் வணிகர்களையும் பாதுகாத்து, மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து, மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்திட மாநிலம் முழுவதும் விரைந்து உரிமங்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
கேமிரா டவர் விழுந்து மாணவர் பலி: கிராம மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர், நவ 2- திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம், மாமண்டூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராம லிங்கம்-புவனா தம்பதியினர். மாநகரப் பேருந்து ஆவடி பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.இத்தம்பதிக்கு தினேஷ் (21), தனுஷ்(20) என இரண்டு மகன்கள் இருந்தனர். தினேஷ் கன்னிகைப் பேர் ஊராட்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், புதனன்று (நவ.1), மாலை கல்லூரி முடிந்து வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கிராமம் செல்லும் கூட்டுச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்ட கோபுரம் ஒன்று முறிந்து சாலையில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவன் தினேஷ் குமார் மீது விழுந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், வனத்துறையின் கவனக் குறைவால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும்,இப்பகுதியில் ஆபத்தான முறையில் இன்னும் நான்கு கண்காணிப்பு டவர்கள் உள்ளது அவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் என வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கிராம கூட்டுச் சாலையில் இறந்த கல்லூரி மாணவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து கிராம மக்களை கலைந்து சென்றனர்.
சாதிப் பெயரைக் கூறி தாக்கிய 3 காவலர்கள்: சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.2- பொது இடத்தில் சாதிப் பெயரை குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி கண்மூடித்தனமாக தாக்கினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, சாதிப் பெயரைக் கூறி, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் துணைவேந்தர் விளக்கம்
சென்னை,நவ.2- அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்ச டிக்கப்படுவது டிஜிட்டல் மயமாக்க பட்டத்தில் முறைகேடு நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சட்டப் பேரவையின் கணக்கு தணிக்கை குழு நடத்திய விசாரணையில் முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க தனியாக ஒரு துணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. 2016-17 காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முறைகேடு புகார்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தது என்றும், தனக்கும் இந்த விவகாரங்கள் குறித்தும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதுவையில் கலந்தாய்வு குழு தலைவர் நீக்கம் நீதி விசாரணை தேவை: சிபிஎம்
புதுச்சேரி, நவ. 2- புதுச்சேரி அரசின் உயர் கல்வி கலந்தாய்வு குழு தலைவரை நீக்கிய விவ காரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்வியில் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த ஒருங்கிணைந்த நிர்வாக குழுவை (சென்டாக் ) அமைத்து நடைமுறை படுத்தப்படுகிறது. புதுச்சேரி அரசு, கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தனி யாக நடந்து வந்த மாணவர் சேர்க்கை அதனை யும் கடந்த 3 ஆண்டுகளாக சென்டாக் நிர்வாகமே நடத்தி வருகிறது. மாணவர்க ளின் நலனுக்காக சென்டாக் ஏற்படுத்தப் பட்ட போதிலும், தனியார் கல்வி நிறு வனங்களுக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகிகளின் செயல்பாடு இருந்தது. மாணவர்கள் நலன் சிறிதும் பொருட் படுத்தாமல் ஆண்டுதோறும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் முழுமையாக நிரம்பும் வரை சென்டாக்கில் மருத்துவ படிப்பிற்கான தகுதி பட்டியலை கூட வெளியிடாமல் நிறுத்தி வைப்பது, பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் மருத்துவ இடம் கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் முடி யாமல் வேறு எந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் இழந்துள்ளனர். இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கலந்தாய்வு குழு தலைவர் சிவராஜ் மீது பொறியியல் பல்கலைக் கழகத்தில் முறைகேடு புகாரின் பேரில் துணை வேந்தர் ஓராண்டுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அன்றே துணை நிலை ஆளு நரின் உடனடி நடவடிக்கையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படாமல் இடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே என் .ஆர். காங்கிரஸ் -பாஜக ஆட்சியர் களின் செல்வாக்கு மிக்க அதி காரியாக வலம் வந்த கன்வீனர் சிவராஜ் தனியார் கல்வி நிறுவன பிரதிநிதியுடன், தனியாக ரகசிய சந்திப்பு வீடியோ பதிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. தலைமைச் செயலாளருக்கும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொறுப்பிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை பொறுப்பில் இருந்து விடுவிப்பது பிரச்சனை முடிந்ததாகவோ, இனி தொடராது என்று கருதவும் இயலாது .நீண்ட காலம் தொடர்ந்து வருகின்ற முறை கேடுகள் மீது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், சென்டாக் முறைகேடு மீது அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.