districts

img

பெரியார் விஷன் ஓடிடி தளம் தொடக்கம் பகுத்தறிவை பரப்பப்பயன்படும்: கனிமொழி எம்பி

சென்னை, ஜூலை 21- “பெரியார் விஷன்”  சமூக நீதிக் கான உலகின் முதலாவது ஓடிடி தளம் ஞாயிறன்று  (ஜூலை 21அன்று)  தொட ங்கப்பட்டது.  சென்னை பெரியார் திடலில் உள்ள எம் ஆர் ராதா மன்றத் தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கருணாநிதி ஓடிடி தளத்தைத் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி காணொலியில் ஒளிபரப்பப்பட்டது.  நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி,  பெட்ரோல், டீசலை விடுத்து மின்சார த்தில் வாகனங்கள் இயக்கப்படலாம் என்று 1938-ல் பெரியார் கூறினார்.  அவர் ஒரு விஞ்ஞானி அல்ல. ஆனால் அறிவியல் பூர்வமாக சிந்தித்தவர். அத னால்தான் அவருக்குத் தொலை நோக்குப் பார்வை இருந்தது.  பெரி யார் தனி மனிதர் அல்ல. அவர் பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய வற்றின் அடையாளம்.  அவரது அனைத்து செயல்களிலும் மனித நேயம் அடிநாதமாக இருந்தது. சமூகத்தில் சரிபாதியாக இருக்கின்ற பெண்களுக்கு கல்வி கொடுக்காமல், சிந்திக்கவிடாமல்  செயலற்றவர்கள் ஆக்கிவிட்டீர்களே என்று  இந்த சமூ கத்தைப் பார்த்து அவர் ஆதங்கப் பட்டார். ஆகவே தான் பெண்கள் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்றும் அதற்கு தடையாக உள்ள அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் பெரியாருக் க்காகத் தேவைப்படவில்லை.  நமக் காக, சமூகத்திற்காக அவர்தேவைப் படுகிறார்.  விஞ்ஞானத்தைப்  பயன் படுத்தி அஞ்ஞானத்தை பரப்புகின்ற காலகட்டத்தில் விஞ்ஞானத்தைப்  பயன்படுத்தி பகுத்தறிவை சுயமரியா தையை மனிதநேயத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு இந்த ஓடிடி தளம் பயன்படும்; பயன்படுத்து வோம் “  என்றார். ஓடிடி தளத்தை தொடங்கி வைத்துப் பேசிய கனி மொழி, சுதந்திரம் இல்லாத சூழலில் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் லிபர்ட்டி கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் மூலம் எல்லோ ருக்கும் லிபர்ட்டி (சுதந்திரம்) கிடைக்க பாடுபட்ட பெரியார் பெயரில் ஓடிடி  தளம் தொடங்கப்படுவது பொருத்த மானது. வெறுப்பு, காழ்ப்புணர்வு ஆகியவை நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்தி உலகம் முழு வதும் பரப்பப்படுகிறது. இதற்கு எதி ரான கருத்தியலை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தக்  கடமையின் பகுதியாக இந்த ஓடிடி தளம் செயல்படும். இளைஞர்கள் மத்தியில் பெரியாரின் சிந்தனைகளைக் கொண்டு செல்லவும், அவரின் சிந்தனைகளைப்  பரவலாக்கவும் இந்த  ஓடிடி தளம் பயன்படும்”என்றார்.  இந்த விழாவில் திரைக்கலைஞர் சத்யராஜ், பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன்,  ஓவியர் டிராட்ஸ்கி மருது, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள் மொழி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலிபூங் குன்றன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  ஓடிடி  தளத்திற்குக் குறும்படங்கள்,  வழங்கிய ஆர். பி.அமுதன் ஆவணப் படத்தை வழங்கிய கீதா இளங்கோவன், ஓராண்டு சந்தா  செலுத்திய மோகனா ஆகியோர் கவுர விக்கப்பட்டனர். முன்னதாக லிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்கு நர்  அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். இதன் அமைப்பாளர் மதிசீலன் நன்றி கூறினார் பிரின்ஸ் என்னாரசு பெரியார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.