திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் ஆட்சியர் அலுவலகம் முன்பு பிப்.16 போராட்டம்
திருவாலங்காடு,ஜன.28- திருவள்ளூர் மாவட்டம், திரு வாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டு றவு சர்க்கரை ஆலைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள், அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டத்தில் உள்ள விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி விவசாயிகள் என 3000 திற்கும் மேற்பட்ட கரும்பு விவ சாயிகள், கரும்பு அனுப்புகின்றனர். இந்த ஆலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இந்த சர்க்கரை ஆலை உள்ளது. 1984 இல் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறும் பழுது பார்க்கிற வேலையை மட்டுமே செய்து வருவதால், அடிக்கடி இயந்திரங்கள் பழுதாகி விடுகிறது. இதனால் உற்பத்தியும் குறைவதோடு, கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் ஆலை நட்டத்தில் இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றால், சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை சர்க்கரைத்துறை ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட வேண்டும் என தொடர்ந்து தமிழ்நாடு முதல மைச்சர் கவனத்திற்கும் சம்மந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளையும் சந்தித்து முறையிடப்பட்டு வருகிறது. தனியார் ஆலைக்கு செல்லும் கரும்புகள் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2.25 லட்சம் டன் கரும்புதான் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அறைக்கப்படுகிறது. மீதமுள்ள 5 லட்சம் டன் கரும்பு தனியார் ஆலைக்கு செல்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். அரவைக்கு கரும்பு பற்றாக்குறை என்பது காரணமல்ல என்பது தெரிகிறது. இதில் மாவட்ட ஆட்சி யர் ஆலையை மேம்படுத்திடும் வகையில் சர்க்கரை ஆலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி ஆலையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசிற்கு உரிய பரிந்துரையை கொடுத்திட வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் பிப். 14 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் உட்பட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
எண்ணை படலம் குறித்து ஆய்வு செய்ய பழவேற்காடுக்கு தனியாக குழு அமைத்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மீஞ்சூர், ஜன,28- திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கழிவு கள், எண்ணூர் ரசாயன தொழிற்சாலையின் அமோனிய வாயு கசிவு, வடசென்னை அனல் மின் நிலையம், தனியார் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் கடலில் கலந்ததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பட்டு மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடு ஒட்டியுள்ள கடலோர பகுதி மட்டுமல்லாமல் மீஞ்சூர், காட்டுப்பள்ளி , அத்திப்பட்டு போன்ற பல கிராமங்களில் அதிகளவு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. விதிகளை பின்பற்றா மல் போனதால், மீஞ்சூரை சுற்றி நிலத்தடி நீர், நிலம், காற்று கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடலோர பாதிப்பை கண்டறிய மாநில அரசு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, மீஞ்சூர் பகுதியில் ஆய்வு செய்ய தனி யாக ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியுள்ளார்.
பெரணமல்லூர் சேகரன் நாவலுக்கு விருது
திருவண்ணாமலை, ஜன.28- விதைகள் பதிப்பகம் மற்றும் விதைகள் வாசகர் வட்டம் இணைந்து மாநில அளவிலான தூரிகை இலக்கியப் போட்டி- 2023 ஐ நடத்தின. இப்போட்டியில் சிறந்த நாவலுக்கான இலக்கிய விருது பெரணமல்லூர் சேகரன் எழுதிய ‘வன்ம மேகம் கலையும்போது’ என்னும் நாவலுக்கு கிடைத்துள்ளது. சிறந்த வரலாற்று நாவல் யுக பிரம்மன் எழுதிய ‘சிம்ம கர்ஜனை’ நூலுக்கும் சிறந்த கவிதை தொகுப்புக்கு ‘மையுதிர்க்கும் மறு ஜென்மம்’ என்னும் அஜி அஜந்தன் நூலுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த நாவல் ஆசிரியராக அருணா கதிரும் சிறந்த வரலாற்று நாவல் ஆசிரியராக ராஜ பிரியனும் சிறந்த கவிஞராக கோமல் தமிழமுதனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான விருதுகள் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன.
என்எல்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு
நெய்வேலி, ஜன.28- என்எல்சி இந்தியா நிறுவனம் தனது தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில், ரூ.2.50 கோடியில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை கட்டித்தந்துள்ளது. புதிய கட்டிடத்தை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மண் திருட்டு ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி, ஜன.28 - ஊத்தங்கரை அருகே மண் திருட்டில் ஈடுபட்டதாக ஆயுதப்படை காவலா் உள்பட 5 போ் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஏரியில் டிராக்டரில் மண் திருடுவதாக, ஊத்தங்கரை வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. வட்டாட்சியா், அலுவலர் குழுவினா் சம்பவ இடத்திற்கு சென்று மண் கடத்தலில் ஈடுபட்டவா்களை பிடித்த போது, அலுவலக உதவியாளா் செல்வத்தை தாக்கி விட்டு, மண்ணுடன் இரண்டு டிராக்டா்களை எடுத்துச் சென்று விட்டதாக, ஊத்தங்கரை காவல் துறையிடம் துணை வட்டாட்சியா் ராஜாகண்ணு புகார் அளித்தார். கல்லாவி காவல் ஆய்வாளா் தமிழரசி ஓலைப்பட்டி கோவிந்தசாமி,சம்பத், பிரபாகரன்,அருண்குமார் , ஜெகன்நாதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மண் கடத்தலில் சம்பந்தப்பட்ட பிரபாகரன் கிருஷ்ணகிரி ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்று தெரிவித்தனர்.
சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளிநாடுகளுக்கு நாப்தா ஏற்றுமதி
சென்னை, ஜன. 28- மணலி சிபிசிஎல் தொழிற்சாலையில் இருந்து கப்பல்கள் மூலம் வெளிநாடு களுக்கு நாப்தா ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த் குமார் கூறுகையில், கச்சா எண்ணை சுத்திகரிப்பு செய்வதற் கான உற்பத்தித்திறன் இங்கு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கந்தக மீட்பு அலகு, ஆவியாகும் கரிம சேர்மங்களை அகற்றும் அமைப்பு, கூரை காற்றாலை உள்ளிட்ட திட்டங்களை சிபிசிஎல் செயல்படுத்தி வருகிறது. மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளா கத்தில் சுமார் 7 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் விரைவில் செயல் பாட்டுக்கு வரவுள்ளது. வங்கதேசம், நமீபியா மற்றும் மொ சாம்பிக் நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் நாப்தாவை சிபிசிஎல் நிறுவனம் முதல் முறையாக ஏற்றுமதி செய்துள்ளது என்றார். மேலும் அண்மையில் அறி முகம் செய்யப்பட்டுள்ள கிழக்கு கடல்சார் வழித்தடத்தில் ரஷ்யா துறை முகங்களிலிருந்து கச்சா எண்ணையை சென்னை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் முயற்சியில் சிபிசிஎல் நிறு வனம் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருட்கள் மற்றும் உயிரி அடிப்படை யிலான ரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்து சென்னை ஐஐடி, ஆர்ஜிஐபிடி உள்ளிட்ட நிறுவனங்க ளோடு இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். நாட்டிலுள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஆண்டு உற்பத்தி செயல் திறனுக்கான சிறப்பு விருதை பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்திடமிருந்து பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி-கும்பகோணம் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவிப்பு
விழுப்புரம்,ஜன.28- விக்கிரவாண்டி-கும்பகோணம் 4-வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மக்களை திரட்டி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.பிர காஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கார்த்திக், விழுப்பு ரம் மாவட்டச் செயலாளர் சே.அறி வழகன், கடலூர் மாவட்டச் செய லாளர் வினோத்குமார் உட்பட கடலூர்-விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிர வாண்டியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் இடையே 165 கி.மீ. சாலை மறுசீரமைப்பு பணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணி தொடங்கி 8 ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப் படவில்லை. தற்போது இந்த சாலையில் உள்ள பெரிய பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை பல இடங்களில் நான்கு வழிச்சாலை பகுதியளவில் நடந்தது. அது முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த புதிய சாலைகள் அமைத்து, நீண்ட காலமாகி,பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக விக்கிரவாண்டி அருகே பனைய புரம் முதல் கோலியனுார் கூட்டு சாலை வரை பல இடங்களில் சாலை சேதமாகி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை மறு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி விழுப்புரம், கடலூர் மாவட்டம் சார்பில் சாலையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களை திரட்டி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும் இணைந்து வருகிற பிப்ரவரி 13 அன்று விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டுசாலையிலும், 14அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலியிலும், 15-ந் தேதி பண்ருட்டியிலும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றினர்.