districts

img

தொரப்பாடி பேரூராட்சியில் கழிப்பறை இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள்

கடலூர்,செப்.5- கடலூர் மாவட்டம், தொரப்பாடி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் சார்பில் ஒரு வாரம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தின் நிறைவாக, செயல் அலுவல ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், வட்டச் செயலாளர் எஸ்.கே. ஏழுமலை, எ.பன்னீர், பி.குமரகுருபரன், என்.குரு நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி வட்டம், தொரப்பாடி பேரூராட்சியில் காவல் நிலையம், பத்திரப் பதிவுத்துறை அலுவலகம், வங்கிகள், பேரூராட்சி அலுவலகம், நியாய விலை  கடைகள், வணிக வியாபார  கடைகள், பேருந்து நிறுத்தம் இருந்தும் இயற்கை உபாதையை கழிக்க பொது கழிவறை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதுப்பேட்டையில் பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும். பேரூராட்சி 8 வது வார்டு நண்பர்கள் நகரில்  2012 -2013 இல் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 10 ஆண்டுகளாக திறக்கப்படா மல் உள்ளது உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 1வது வார்டு மேட்டா மேட்டில் 2014- 2015 ஆண்டில்  ரூ. 42 லட்சத்தில் கட்டப்பட்ட  சமுதாய நலக்கூடத்தில் போதிய கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும், தேவையான அளவுக்கு சமையல் பாத்திரம் வாங்கி தர வேண்டும் என்றும் பேரூராட்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர்.