சிதம்பரம், ஜூன் 21-
சிதம்பரம் நகரத்தில் வீடு இழந்தவர்க ளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது.
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் நிகழ்ச்சியில், சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 33 வது வார்டு, 4-வது வார்டு தில்லையம்மன் கோவில் பகுதி, அண்ணா மலை நகர், திருவக்குளம் ஆகிய பகுதி களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் குழு உறுப்பினர்கள் மல்லிகா, அமுதா, சின்னையன் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவின் விவரம் வருமாறு:-
சிதம்பரம் நகரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் என இடிக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகளை கடந்தும் மாற்று வீடும் மாற்று இடமும் வழங்கவில்லை.
அதே போல், முதியோர் மற்றும் விதவைத் தொகை வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு திடீர் என நிறுத்தப்பட்டது. மேலும் புதிதாக விண்ணபித்தவர்களுக்கு உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருந்தனர்.