சென்னை,ஜன.17- தமிழகத்தில் புதனன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்க ளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர். மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி போலீ சார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். மெரினா வில் கடலில் குளிக்க தடைவிதிக்கப் பட்டது. இதற்காக கடற்கரை யோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். குதிரைப்படை யினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாக னங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்த னர். மேலும் டிரோன் கேம ராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். மெரினா கடற்கரைக்கு மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டு களித்தனர். மாமல்லபுரத்தில் காலை யிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்து காணப்பட்டது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வரு கின்றன. பொங்கல் பண்டி கையையொட்டி வண்டலூர் உயி ரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர். காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயி ரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.