கடலூர்,ஜன.1- புத்தாண்டு விடு முறையை முன்னிட்டு கட லூர் வெள்ளி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து மிகப்பெரியது கடலூர் வெள்ளி கடற்கரை புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டம், மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லா யிரக்கணக்கான பொது மக்கள் கடலூர் வெள்ளி கடற்கரையில் குவிந்தனர். பெற்றோர்கள் தங்க ளுடைய குழந்தைகளுடன், குடும்பத்துடன் வந்தி ருந்து. பல்வேறு விளை யாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். அதிக அளவில் கூட்டம் நிறைந்துள்ளதால் காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, விழிப்புணர்வு, பாதுகாப்புகள் குறித்து ஒலிபெருக்கியில் அறி வுறுத்தினர். கடலில் சீற்றம் அதிகம் இருப்பதால் அதிக ஆழ முள்ள பகுதிக்கு தேவனாம் பட்டினம் கடல் உள்ள தாலும் பொதுமக்கள் குளிப்ப தற்கு காவல்துறை தடை விதித்தனர். கடற்கரை ஓரத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் மற்றும் கடலோர பாது காப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.