districts

img

வடசென்னையில் மக்கள் சந்திப்பு இயக்கம் துவங்கியது

ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட சென்னை மாவட்டத்தில் நவம்பர் 15ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூரில் நடைபெற்ற இயக்கத்தை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.