districts

img

சிதம்பரம் அருகே கருப்பு கொடி ஏந்தி தீபாவளி பண்டிகையை புறக்கணித்த மக்கள்

சிதம்பரம், நவ. 13- சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ வன்னியூர், மேல வன்னியூர், குமராட்சி, காமராஜர் நகர், திருநறையூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.   இந்த கிராமங்களில் ஏழை கூலி தொழிலாளர்க ளுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேலைகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு பணி செய்து வரு கின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாத காலமாக கூலி வழங்கவில்லை.  தற்போது தீபாவளி நேரம் என்பதால் உடனடியாக 100 நாள் வேளை கூலியை வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்த னர். இந்த நிலையில் ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேளையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு  மோடி தலைமையிலான பாஜக அரசு  நிதி ஒதுக்காத தால்  தீபாவளியின் போது கிராமப்புற ஏழைமக்கள் கரும்பு தீபாவளியாக அனுசரித்து கருப்பு கொடி ஏந்தி பண்டி கையை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய செய லாளர் ஜெயக்குமார் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.