திருவள்ளூர் மாவட்டத்தில் திங்களன்று (ஜன 27) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி வாழ்வாதாரத்திற்காக தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பம் மனுவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் வழங்கினார். மனு கொடுத்த சில நிமிடங்களில் மாவட்ட சுற்றுசூழல் துறை சார்பாக ஏற்பாடு செய்து மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரத்தை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முககை வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் ஆகியோர் உடனிருந்தனர்.