திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 698 மனுக்களை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்றுக்கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தனித்துனை ஆட்சியர் தீபசித்ரா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.