districts

img

விதிமுறை மீறிய கனரக வாகனங்களுக்கு அபராதம்

பொன்னேரி,நவ.30-  மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மற்றும், அதானி துறைமுகம், மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பெட்ரோலிய நிறுவனம் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு பல்வேறு மாநி லங்களில் இருந்தும், மாவட்ட ங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன.  மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக வந்து செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அவ்வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் மீஞ்சூர் நகர் வழியாக பொன்னேரி நகரை கடந்து தச்சூர் கூட்டுச்சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. இதனால் பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மீஞ்சூர்-தச்சூர் கூட்டுச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கன ரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி தச்சூர் சாலையில் இருந்து பொன்னேரிக்கு வந்த 90 கனரக வாகனங்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.