குழந்தைகள் நல தீவிர சிகிச்சை நிபுணர்கள் மாநாடு சென்னை, டிச.15- இந்தியாவின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி வருவதில் முக்கியப் பங்கு வகித்துவரும் பிரிக்ரிட்டிக்கான் 26-வது மாநாடு சென்னையில் டிச. 13-ம் தேதி முதல் டிச. 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 17 குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள், 200 முன்னணி குழந்தை நல தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற மாநாடு, குழந்தை நல மருத்துவ சிகிச்சையை நவீனமயமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முன்னோடித்துவ முயற்சிகளு டன் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகை யில் அமைந்திருந்தது. உடலுறுப்பு மாற்றுக்கான தீவிர அறுவை சிகிச்சை, புற்று கட்டி தீவிர சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மீண்டு வருவதில் பின்பற்றப்படும் நடைமுறைகள், குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி இந்த மாநாட்டை தொடங்கிவைத்தார்.