விழுப்புரம்,செப்.19- செஞ்சி அருகே 50 ஆண்டுகளாக குடி மனைப்பட்டா, குடிநீர், சாலை வசதி யற்ற நிலையில் வாழும் மக்களின் கோரிக்கைகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பி.ஏரிக்கரை யில் இருந்து வெளி யேற்றப்பட்டு ஊரணித்தாங்கலில் குடிய மர்த்திய 20 குடும்பங்களுக்கு 50 ஆண்டு களாக அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் செய்து கொடுக்கவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதி காரிகளை பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் பல முறை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டச் செயலாளர் ஏ.சகாதேவன் தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. இந்த தகவலறிந்த செஞ்சி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். செயலாளர் ஏ.சகாதேவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், ஆல்பர்ட், சுப்பிரமணியன், செல்வராஜ், வாலிபர் சங்க ஆனந்தராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சாரதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, 15 நாட்களுக்குள் அனைத்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.