districts

img

ஜிப்மர் மருத்துவமனை விடுமுறையால் நோயாளிகள் அவதி

புதுச்சேரி,ஜன.21- புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை அமைந்துள்ளது.   ஒன்றிய அரசின் சுகாதாதரத்துறை அமைச்சகத்தின்  கீழ் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. நவீன வசதிகள், உயர் சிகிச்சை என இம்மருத்துவமனையின் தரம் சிறப்பாக உள்ளது. எனவே அன்டை மாநிலங்களான தமிழகம், கேரளம்,  ஆந்திரா, கர்நாடகா என தென்மாநிலங் களை சேர்ந்தவர்கள் தங்களுக்கான சிகிச்சையை இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.  நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிப்புற சிகிச்சை யும்  800 க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். விடுமுறையால் நோயாளிகள் பரிதவிப்பு அயோத்தியில் ராமர்கோவில் திறப்பு விழாவிற்காக ஒன்றிய பாஜக  அரசு, மத்திய அரசு அலுவலகங்க ளுக்கு திங்கள்கிழமை (ஜன-22) விடு முறை அறிவித்துள்ளது. பாஜக அரசின் விசுவாசியாக செயல்படும் ஜிப்மர் இயக்குநர் அகர்வால், அத்தியவாசிய சேவை பிரிவில் மருத்துவம் உள்ளது என்பதை பொருட்படுத்தாமல், ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை  அறிவித்து தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்  சேர்ந்த நபர் என்பதை நிரூபித்துள்ளார். ஜிப்மருக்கு விடுமுறை விடப்பட்டதால்  தமிழகம்,கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறை நாளான்று  சிகிச்சை பெறுவதற்கு அனுமதிபெற்று இருந்த நோயாளிகள் இரண்டு நாட்களுக்கு முன்னே மருத்துவமனைக்கு வந்து  தங்கி விடுவது வழக்கம். இந்நிலையில் நீண்ட தூரத்திலிருந்து ரூ.1000 தொகை செலவு செய்து பயணித்து வந்த நோயளிகள் ஜிப்மர்  நிர்வாகத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்குவதற்கு  வசதி செய்யாத நிர்வாகம்

இதுகுறித்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராமசுந்தரம் வயது 65 என்ற நோயாளி கூறுகையில்.   தனக்கு அறுவை சிகிச்சை செய்வ தற்காக சனிக்கிழமை (ஜன.20) அன்று வரச்சொன்னார்கள். எனது  மனைவியை அழைத்து கொண்டு  இங்கே வந்தேன்.  மருத்துவமனைக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட் டுள்ளது. எனவே அடுத்த நாள்  செவ்வாய்கிழமை தான் மருத்துவர் களை பார்க்க முடியும் என்று கூறி விட்டனர். பேருந்துக்காக ரூ.1000 செலவு செய்து வந்துள்ளேன் எனவே  மீண்டும் எனது ஊருக்கு சென்று வர வாய்ப்பில்லை.  எனவே மருத்துவ மனை அருகில் உள்ள நடைபாதையில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பரிதாபமாக கூறினார். சுமதி என்ற நோயாளி கூறுகையில் நான் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி யில் இருந்து வந்துள்ளேன். எனது முழங்காலில் அடிப்பட்டு ஒரு மாத மாக இங்கே தங்கி சிகிச்சை பெற்றேன்.  தற்போது பரிசோதனை செய்து அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க மருத்து வர்கள் ஜனவரி 22 அன்று வரச் சொன்னார்கள். பல்வேறு சிரமங்க ளுக்கு மத்தியில் இங்கே வந்தேன்.  வந்தவுடன்  ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை என்பதை அறிந்து கொண்டேன். என்னால் மீண்டும் என் ஊருக்கு சென்று வரமுடியாது எனவே ஜிப்மர் மருத்துவமனை வெளிபுறத்திலேயே தங்கி உள்ளேன் என்றார்.  நோயாளிகளை வெளியேற்றிய நிர்வாகம் பெரும்பாளான  நோயாளிகள் திங்கள்கிழமை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முன்பே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து விடுவது வழக்கம்.  இந்நிலையில் திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்ட தால், வெளிமாநிலங்களில் இருந்து  முன்கூட்டியே வந்த  நோயாளிகளை ஜிப்மர் வாளாகத்திற்குள் அனுமதிக் காமல் காவலர்களை வைத்து நிர்வாகம்  வலுகட்டாயமாக வெளியேற்றியது. மேலும் செவ்வாய்கிழமை (ஜன-23)  தான் அனைத்து மருத்துவ பணிகளும் நடைபெறும். எனவே அன்று தான் மருத்துவமனை முழுமையாக செயல் படும் என்று காவலர்கள் மூலம் நோயாளிகளுக்கு  அறிவுறுத்தி தெரிவித்தனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். -முருகன்