திருவண்ணாமலை, அக்,.18- தமிழக துணை முதல்வரான பிறகு, முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் வெள்ளியன்று (அக்.18) நடைபெற்ற அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தீப விழாவையொட்டி செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் எ.வ. வேலு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ , சங்கராபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகி யோர் சால்வை அணிவித்து வரவேற்ற னர். இதையடுத்து, திருவண்ணாமலை யில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பார்வையிட்டு உதய நிதி ஆய்வு செய்தார். தீபத் திருவிழா வுக்கு வரும் பக்தர்களுக்கு தேவை யான கூடுதல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இளைப்பாரும் கூடங்கள் அமை த்தல், தற்காலிகப் பேருந்து நிலை யங்கள் அமைத்தல் குறித்து அதிகாரி களிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சியில் இன்று விழா தொடா்ந்து, 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருக் கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் கலைஞா் விளை யாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு வீரர், வீராங்கனை களுக்கு விளையாட்டு உபகரணங் களை உதயநிதி ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவல கத்தில் அனைத்துத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் கலைஞர் நூற் றாண்டு நூலகம் திறப்பு விழாவிலும் துணை முதலமைச்சர் கலந்துகொள்கி றார். துணை முதல்வா் உதயநிதி ஸ்டா லின் வருகையையொட்டி, செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சி யா் எம்.எஸ்.பிரசாந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, சட்ட மன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்தி கேயன், உதயசூரியன். மக்களவை உறுப்பினர் மலையரசன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், பிரநிதிகள் உதய நிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்ட மிட்டுள்ளனர்.