districts

img

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூங்கா அமைப்பு பணி தீவிரம்

சென்னை,ஜன.22- சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக அழகிய பூங்கா அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 380 கோடி ரூபாய் செலவில், ‘சென்ட்ரல் சதுக்கம்‘ கட்டுமான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ‘சென்ட்ரல் சதுக்கம்‘ கட்டும் இடத்தை தவிர, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை விக்டோரியா ஹால், எம்.ஜி.ஆர், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், மூர்மார்க்கெட் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் எக்ஸ்பி ரஸ் நிலையங்களுக்கு இடையே, அழகிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரலில் வடக்கு பக்கத்தில் காலி இடங்களில் அழகிய பூங்கா அமைக்கப் ்படுகிறது. இதன் வழியாக, அனைத்து நிலை யங்களுக்கும் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் நடைபாதைகளும், நிழல் குடைகளும், அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அங்கு பயணிகள் அமர பளிங்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தரையை அழகுபடுத்தி பூஞ்செடிகள் வளர்த்து பூங்கா அழகு படுத்தும் பணிகள் நடக்கிறது. கிரானைட் கற்கள் பதிப்பு, கண்ணாடி சுவர்கள் நிறுவப் பட்டு வருகிறது. பூங்கா பணிகள் விரிவு படுத்தப்பட்டு இம்மாத இறுதியில் பயணிகள் ் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.