districts

சென்னை முக்கிய செய்திகள்

பூங்கா தூதுவர் திட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் துவக்கம்

செங்கல்பட்டு,ஏப்.15- வண்டலூரில் செயல்பட்டுவரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இந்த வருட கோடை விடு முறையை  உற்சகமாகவும், அறிவு நிரம்பியதாகவும் மாற்ற மாணவர்களுக்கான உயிரியல் பூங்கா தூதுவர் திட்டத்தை பூங்கா நிர்வாகம் இணையதளத்தில் அறிவித்துள்ளது. 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்கள் பல்வேறு வகையான வன விலங்குகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில், தனித்தனி வகுப்புகளாக பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பூங்காவின் செயல்பாடு களை பற்றிய பூங்கா களத்தில் சென்று அறியும் வாய்ப்பு பெறுவார்கள். இந்த நிகழ்ச்சியானது உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் பூங்கா கல்வியாளர்களால் நடத்தப்பட உள்ளது.  இம்முகாமானது 3 நாட்கள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் 50 மாணவர்கள் கோடை தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு 5 பிரிவுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்பாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா தூதர் என்ற சான்றிதழ், பேட்ஜ் வழங்கப்படும். மேலும் 10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் வந்து செல்ல இலவச கடவுச்சீட்டும் வழங்கப்படும். பங்கேற்கும் மாணவர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதராக இருப்பதோடு, உயிரியல் பூங்காவை மேம்படுத்துவதிலும், உயிரியல் பூங்கா விலங்குகளைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க www.aazp.in/summercamp2024/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என  பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.12.32 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் மோசடி

சென்னை, ஏப். 15- சென்னை தி.நகரில் பிரபல நகைக்கடையில் ரூ.12.32 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக இருவர் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.  தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு பிரபலமான நகைக்கடை செயல்படுகிறது. இந்த நகைக்கடையின் மேலாளர் சந்தோஷ் குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘நகை வியாபாரிகளான கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை 38.6 கிலோ தங்க நாணயங்களை எங்களிடம் வாங்கி னர். இந்த நாணயங்களுக்கு 9.475 கிலோவுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 28.531 கிலோ கிராம் தங்க நாணயத்திற்கு பணம் கொடுக்கவில்லை. பல முறை நாங்கள் பணத்தைக் கேட்டு, பலன் இல்லை. எனவே, நகை மோசடியில் ஈடு பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது தங்க நாணயங்களை திரும்ப பெற்றுத் தர வேண்டும். அல்லது அதற்கான பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி பாஜக   சிதம்பரத்தில்  திருமாவளவன் பேச்சு

சிதம்பரம், ஏப். 15- இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி சிபிஎம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன் கூறினார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திங்களன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பள்ளிப்படை, கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பூண்டி குமாரமங்கலம், பிச்சாவரம்,டி.எஸ். பேட்டை, கனகாரப்பட்டு, உத்தமசோழமங்கலம், கொடிபள்ளம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், பெரிய மதகு, மடுவாங்கரை, நஞ்சமகத்துவாழ்க்கை, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணிக்கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :    சனாதன சக்திகள் உங்களிடம் வந்து பசப்பு வார்த்தைகள் கூறி பேசுவார்கள் நம்ப வேண்டாம்.   இட ஒதுக்கீட்டை கொஞ்சமும் விரும்பாத கட்சி பாஜக. அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்திய அரசமைப்பு சட்டம் இருக்காது.  அனைத்தையும் அழித்து விடும்.  ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறிய விபி சிங் ஆட்சியை கவிழ்தது பாஜக தான். எனவே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கும் மக்கள் நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் ஏழை மக்களுக்கு கிடைக்க தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற நமது அணி மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்றார். இதில்  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கலையரசன், மாநில செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திமுக கொத்தங்குடி கிளை செயலாளர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு இழுத்தடிப்பு சிபிஐக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை, ஏப். 15 - தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்ற புகாரில் தில்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட ஒன்றிய - மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பரில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் வழக்கின் நிலை என்ன? என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.