விழுப்புரம், டிச.25- கண்டாச்சிபுரத்தில் பழுதான சிறிய அளவிலான தண்ணீர் தொட்டியை சீரமைத்து கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர் மேட்டுப்பகுதி. இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் சேவை வழங்கி வந்தனர். இந்த தொட்டி பழுதாகிய தால் குடி தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. 8 மாதமாகியும் தண்ணீர் தொட்டியை சீரமைத்து கொடுக்கவில்லை. இதையடுத்து, சிபிஎம் சார்பில் கிளைச் செயலாளர் எம்.ஏழுமலை தலைமையில் டிச.25 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, கிளைச் செயலாளர்கள் எம்.ஸ்ரீதர், எம்.பாபு உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.