சென்னை, ஜன. 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட் டத்தின் காரணமாக பல்லா வரம் மேம்பாலம் இருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது. ஜிஎஸ்டி சாலையில் கடுமையான வாகன போக்கு வரத்து நெரிசல் இருந்தது. அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகளின் கோரிக் கையை ஏற்று பல்லா வரத்தில் ரூ82.66 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.5 கி.மீ நீளம் கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத் தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று வரும் வகை யில் இருவழிப்பாலமாக அமைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் கொண்டுவரப்பட்டது. இரு வழிப்பாதை கொண்டதாக அறிவிக்கப்பட்ட பாலம், தாம்பரம் - விமான நிலை யம் மார்க்கமாக செல்லும் வகையில் ஒருவழிப் பாதை யாக திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். விமான நிலையத்தி லிருந்து செல்லும்போது சாலை குறுகலாக உள்ள தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, மேம்பாலத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். பாலத்தின் கீழ்ப்பகுதியில் மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளி அருகே ஜிஎஸ்டி சாலை - ராஜீவ்காந்தி சாலை சந்திப்பில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரி யது. சிபிஎம் போராட்டம் இதனை வலியுறுத்தி கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 26ந் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பல்லா வரம் வாரச் சந்தை வியாபாரி கள் சங்கம், பல்லாவரம் ரயில்வே நிலையம் ரோடு சிறு கடை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. அதனைத் தொடர்ந்து சிறுகுறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பர சனை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.
அமைச்சர் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் மே 16 அன்று நெடுஞ் சாலைத்துறை அதிகாரி கள், சிபிஎம் தலைவர்கள், வியாபாரிகள் சங்கத்தின ருடன் சென்று பல்லாவரம் மேம்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, பாலத்தின் இரு முனைகளி லும் உள்ள மைய தடுப்பு களை (சென்டர் மீடியன்) அகற்றி, 3 மாதத்தில் மேம் பாலத்தை இரு வழிப் பாதையாக மாற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பயணிகள் சாலையை கடக்க ஏதுவாக ஜிஎஸ்டி சாலை - ராஜீவ் காந்தி சாலை சந்திப்பில் உள்ள தடுப்புகளை உடனடி யாக அகற்றி வாகன போக்கு வரத்தை அனுமதிக்கவும் கூறினார். மறியல் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக மாற்ற வும், தடுப்புகளை அகற்ற அமைச்சர் உத்தரவிட்டு 6 மாதங்களை கடந்தும் அதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் மேற் கொள்ளவில்லை. குறிப் பாக, ஜிஎஸ்டி சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க போக்குவரத்து காவல்துறைக்கு நெடுஞ் சாலைத்துறை பணம் கொடுத்தும் சிக்னலை அமைக்காமல் இருந்தனர். இதனை கண்டித்து நவ.3ந் தேதி ஜிஎஸ்டி சாலையில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் வியாபாரி கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்ற மறியல் நடை பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அதன்பிறகு, ஜிஎஸ்டி சாலை - இந்திரா காந்தி சாலை சந்திப்பில் இருந்த தடுப்புகளை அகற்றி பாதசாரிகள் கடக்கவும், வாகனங்கள் செல்லவும் காவல்துறையினர் அனு மதித்தனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, விமான நிலையம் - தாம்பரம் மார்க்கத்தில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ராணுவ இடத்தை கையகப் படுத்தி சாலை விரிவாக்கப் பணியை செய்து வருகிறது.
இருவழிப்பாதை
இந்த நிலையில், மேம் பாலத்தை இருவழிப்பாதை யாக மாற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் படி விமான நிலையத்தி லிருந்து தாம்பரம் மார்க்கமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக மைய தடுப்பு உடைக்கப்பட்டு, பாலத்தின் மேல் இருவழிப் பாதையாக பிரித்து பிளாஸ்டிக் மைய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இரு மார்க்கத்திலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன. இதனால் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் குறையும். காலை, மாலை நேரங்களில் கடும் வாகன நெரிசலில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள் இலகு வாக பயணிக்க முடியும்.