புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியில் நடைபெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் சரவணன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்கங்களின் நிர்வாகிகள் சத்யா, மாரிமுத்து, ஜானகி, சஞ்சய், பிரவீன் குமார், நிலவழகன், வந்தனா, கணேஷ்,சந்திரராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.