districts

img

பத்மினி வழக்கின் போராளி சிவகாமி காலமானார்

சிதம்பரம், ஜூலை 25-

     சிதம்பரம் பத்மினி வழக்கு போராட்ட களத்தில் முன் நின்றவர், அண்ணாமலை நகரில் மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்த வருமான அமைத்துக் கட்சி வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றிய வருமான தோழர் ரா.சிவகாமி (65) உடல்நலக் குறைவால் அவரது வீட்டில் காலமானார்.

    அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசித்ரா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக் குமரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் புதன்கிழமை (ஜூலை 26) காலை 10 மணிக்கு அவ ரது இல்லத்திலிருந்து புறப்படுகிறது.