சென்னை, பிப். 27- மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள் முதல் செய்ய ஒப்பந்தம் வெளியிடப்பட் டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப் படும் பேருந்துகளில் தினசரி 33.60 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட வற்றால் நாளுக்கு நாள் பொது போக்கு வரத்து தேவையும் அதிகரித்துள்ளது. சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை நிவர்த்தி செய்வ தற்காக கூடுதல் பேருந்துகள் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிதாக மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டது. முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளுக்கு ஏற்கெனவே ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்த நிதி யாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப் படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 500 மின்சார தாழ்தள பேருந்துகளை கொள் முதல் செய்ய போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகரிகள் கூறுகையில், சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலை கள், அலுவலகங்கள் அதிகரித்து வருவ தால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது 3,436 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது 500 மின்சார தாழ்தள பேருந்துகள் கொள் முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் 400 சாதாரண பேருந்துகள், 100 குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்க உள்ளோம். பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகள் கிராஸ் காஸ்ட் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், மின்சார பேருந்துகள் இயக்கம், பராமரிப்பு பணி மேற்கொள்ள தகுதியான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் புதிய பேருந்துகள் படிப்படி யாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.