districts

நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சி

சென்னை, செப். 12- தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப்.7 ஆம்  தேதி வெளியானது. தமிழ கத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 51.3 விழுக்காட்டினர்  (67,787 பேர்) தேர்ச்சி பெற்றனர். கடந்த  ஆண்டு 54.40விழுக்காட்டினர்  தேர்ச்சியடைந்தனர். அதே போல் மதிப்பெண் அடிப்படை யிலும் கடந்த ஆண்டைவிட தமிழகம் பின்தங்கியது. தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில், நீட் தேர்வில்  அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழக அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 17,972 பேர்  தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே  தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 விழுக்காடு முதல் 25 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 விழுhட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய  பேருக்கு நெகட்டிவ் மார்க்கிங் முறை இருந்ததுகூட தெரிய வில்லை என்ற தகவல்களும் வெளியாகி அரசு பயிற்சி மையங்கள் தரத்தின் மீது கேள்விகளை எழுப்பியது கவனிக்கத்தக்கது.

;