திருவண்ணாமலை, ஜன.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருவண்ணாமலை யில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செய லாளர் ப.செல்வன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் எம். பிரகலாதன் வர வேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மூத்த நிர்வாகி எம்.வீர பத்திரன், மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 39 பேர் கொண்ட வரவேற்பு குழுவின் தலைவராக எம். வீர பத்திரன், செயலாளராக ப. செல்வன், பொருளாளராக கே. காங்கேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.