சென்னை, நவ. 6- பண மோசடி வழக்கில் ஆஜராகாமல் உள்ள இலங்கை தமிழரை தேடப் படும் குற்றவாளியாக அறிவிப்பதற்கு முன்பு, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை வளசரவாக் கத்தில் தங்கியிருந்த இலங்கை தமிழர்களை கடந்த 2014ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அதிக பணம் பெற்றுக் கொண்டு அனுப்புவதாக சென்னை கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை காவல் துறையினர் இலங்கை தமிழர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்த மல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப் பட்டு ஜாமினில் சென்ற அந்தோணி (எ) ஐயா (55) என்பவர் வழக்கு சம்பந்த மாக நீதிமன்றத்தில் ஆஜரா காமல் தலைமறைவாகி விட்டார். காவல்துறையினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.மேலும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை. இதையடுத்து அந்தோ ணியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. அப்போதும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. அவர் நீதிமன்றத் தில் ஆஜராகவும் இல்லை.தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறை மாக உள்ள அந்தோணியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பதற்கு முன்பு வரும் 8 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்டாலின் அறிவித்தார்.