districts

img

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.3 கோடி மேம்பாட்டு நிதி வழங்கப்படும். 2021 – 22 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 50 சதவிகிதம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதைக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களது தொகுதியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்த துவங்கினர்.

இதற்கிடையில், போதிய நிதி இல்லாமல் மேற்கண்ட பணிகள் பாதியில் நிற்கத் துவங்கின. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள 50 சதவிகித மேம்பாட்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மீதமுள்ள 50 சதவிகித நிதியையும் விடுவித்து, திங்களன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரியவருகிறது.