கடலூர், ஜன.29 – தனியார் தொழிற்சாலைக்கு விவ சாய நிலங்களை கையகப்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார், விளை நிலங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அழித்தனர். கடலூர் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலை யடிக்குப்பம், கொடுக்கன் பாளை யம், பெத்தனாங்குப்பம் கிராமங்க ளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்ப தற்காக கடந்த டிச.19 ஆம் தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தாகவும், 15 நாட்களுக்குள் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வரு வாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்த தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஏற்கனவே மலையடி குப்பம் கிராமத்தில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில், 100 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரும் இந்த மக்கள், கரடு முரடான மலை பகுதியை சீர்ப்படுத்தி சமப்படுத்தி பல்லாண்டு கால உழைப்பின் வெளிப்பாடாக முந்திரி சாகுபடி செய்து வருகிறார்கள். எனவே, குடி யிருக்கும் இடத்திற்கு, விலை நிலங்க ளுக்கு பட்டா வழங்கக் கோரி அந்த கிராம மக்கள் அளித்த மனு பரி சீலனையில் உள்ளது. இந்த நிலை யில், சுமார் 150 பேரின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் முந்திரி சாகு படி அழிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதை யடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இந்த நிலையில், ஜேசிபி எந்தி ரங்களுடன் திடீரென்று போலீசார் துணையுடன் வந்த வருவாய் துறை யினர் (ஜன.29) அன்று ஆக்கிரமிப்பு களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்திரங்களை மறித்து முற்றுகையில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலந்து கொண்டன.
பின்னர், கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் பலராமன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், முந்திரி மரங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்யப்பட்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், ஜே.ராஜேஷ் கண்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர். கே.சரவணன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் சுரேஷ், வாலிபர் சங்க ஒன்றியத் தலை வர் கலைவாணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் கண்டனம் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் ஒன்றியம் வெள்ளக்கரை மதுரா மலையடிக்குப்பம், கொடுக்கம்பாளையம், வெ. பெத்தனாங்குப்பம், கீரப்பாளையம், கட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் 200 ஆண்டுகளுக்கு மேலாக 5 தலைமுறைகளாக 155 குடும்பங்கள், 164 ஏக்கர் அரசு தரிசு நிலங்களை மேம்படுத்தி பண்படுத்தி, வீட்டு மனைகளாகவும், விளை நிலங்களாகவும் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக முந்தி, கரும்பு, வாழை, பூக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட சில மூலிகை செடிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு மிக அப்பட்டமான அடியாள் வேலை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கிராமப் பெண்கள் மீது காவலர்கள் நடத்திய தாக்குதல் மிக மோசமான மனிதாபிமானமற்ற செயலாகும். எனவே, இந்த சம்பவத்திற்கு காரணமான வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வலி யுறுத்தியுள்ளார்.