பொதுத்துறைகளை விற்கும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூலை 10) ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச்செயலாளர் சி.திருவேட்டை யூனியனின் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், இணைச் செயலாளர்கள் ஜே.கதிரவன் , என்.ஹரிபாபு உள்ளிட்டோர் பேசினர்.