districts

img

பள்ளி வளாகத்திற்குள் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு

கடலூர்,மார்ச் 7- கடலூர் வன்னியர் பாளையம் பகுதி யில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத் தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்திற்கு தயாரானதால் அடிக்கல் நாட்டுவிழா  நிறுத்தப்பட்டது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 வது  வார்டு வன்னியர் பாளையம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடியும்  செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் பூங்கா அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஏற்கெனவே மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்திற்குள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்காக அடிக்கல் நாட்டும் பணி வியாழ னன்று நடைபெற இருந்தது. இதற்காக மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் அப்பகுதிக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மாநகராட்சி ஆணையர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் எடுத்து அடிக்கல் நாட்டும் பணி  நிறுத்தப்பட்டுள்ளது வேறு இடத்தில்  ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடம்  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த போராட் டத்தில் அந்த பகுதி அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர்.