ராணிப்பேட்டை, ஆக. 24 - ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம், கீழ் வெங்கடாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி தலைமை யில் ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் வெள்ளியன்று (ஆக. 23) திறக்கப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் தாஸ் பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணகி தனசேகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் தொடர் கோரிக்கை ஏற்று ஒன்றிய குழுத் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்பட்ட பில் தொகையில் ரூ.1.30 லட்சம் வழங்கப்படாமல் இருந்தது. நிலுவை தொகையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒப்பந்ததாரரிடம் அளித்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு திறந்து வைத்தார்.