districts

img

வேளாண் சந்தை நுண்ணறிவை அறிந்துகொள்ள புதிய கட்டிடம் திறப்பு

கள்ளக்குறிச்சி, டிச.26 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையக் கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வியாழனன்று (டிச.26) திறந்து வைத்தனர். கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையக் கட்டிடம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பிரேமா, அன்பழகன், வேளாண்மை உதவி இயக்குர் (தரகட்டுப்பாடு)  பொன்ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு,விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சரவணபவ மற்றும் வேளாண்மை அலுவலர்கள்,உதவி வேளாண்மை அலுவலர்கள்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.