கிருஷ்ணகிரி,ஏப்.14- ஓசூர் பூனப்பள்ளி அருகே புதிதாக தி சுமன் நிர்மல் மிண்டா பள்ளி திறக்கப்பட்டது. யுநோ மிண்டா தொழிற்சாலைகள் குழுமத்தின் சுமன் நிர்மல் மிண்டா அறக்கட்டளையின் மூலம் துவங்கப் பட்டுள்ள இப்பள்ளியை சுமன் கே மிண்டா திறந்து வைத்தார். விழாவிற்கு சுமன் நிர்மல் மிண்டா முன்னிலை வகித்தார்.ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 7.5 ஏக்கர் பரப்பில் துவங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் 350 மாணவர்களுக்கான அனைத்து வசதிகளுடனும் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது.