districts

img

செம்பரம்பாக்கம் ஏரியில் 200 கனஅடி உபரிநீர் திறப்பு

காஞ்சிபுரம், நவ. 28- செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து செவ்வாய்க் கிழமை 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை  தொடங்கியது முதல்  சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரு கிறது. ஆனால்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதி கரித்து வருகிறது. மேலும் ஏரி பகுதிகளில் அதிகமாக மழை பெய்கிறது. இதில், புழல் ஏரிக்கு நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக  உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித் துள்ளது. அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப் படி 24 அடி உயரம் உள்ள  செம்பரம்பாக்கம் ஏரியில்  22.29 அடிக்கு நீர் இருப்பு  உள்ளது. ஏரியின் பாது காப்பு கருதி, செவ்வாய் காலை 200 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.