ராணிப்பேட்டை, செப்.6 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ. 2 கோடியே 28 லட்சத்தில் 6 புதிய புறநகர் பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெள்ளியன்று (செப்.6) துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொதுமேலாளர் கணபதி, நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அசோக், தொ.மு.ச ரமேஷ், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.