திருவள்ளூர், செப். 25- ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரு வள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று செங்குன்றத்தில் (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓட்டுநர்களை பாதிக்கும் புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டு நரை கொலை குற்றவாளியாக்குவதை கைவிட வேண்டும், திருத்தணி ஆர்டிஒ அலுவலகம் நாள்தோறும் செயல்பட வேண்டும், திருவள்ளூர் ரயில்வே நிர்வாகம் சிஐடியு ஆட்டோ சங்கத்திற்கு ரயில்வே பாஸ் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை ஆட்டோ தொழிலாளர் களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி செங்குன்றம் மற்றும் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சா.வேலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், தையல் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சந்திரன், எஸ்.பரமசிவம், வி.பாஸ்கர், மீஞ்சூர் சாய்ரா ஆகியோர் பேசினர். திருவள்ளூர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலை வர் ஏ.கரிமுல்லா தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சங்கர்தாஸ், மாயக்கண்ணன், சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.